ஒப்பந்த தொழிலாளர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு

கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேரக் காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேரக் காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பொது தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜி.பி., மாரிமுத்து கூறியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும். காவலர்களுக்கும் மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதைப்பற்றி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.



உடனடியாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை மற்றும் பண்டிகைக்கால விடுமுறை அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்துள்ளோம். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சனைகளை மாநகராட்சி சரிசெய்ய தவறும்பட்சத்தில் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...