ஊருக்கெல்லாம் காய்கறி கொண்டு சேர்க்கும் தங்களால் ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியல; வேலைநிறுத்தத்தால் குமுறும் லாரி ஓட்டுநர்கள்

கோவை: விவசாயப் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களுக்கு, தற்போதைய வேலைநிறுத்தத்தின் காரணமாக ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்.


கோவை: விவசாயப் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களுக்கு, தற்போதைய வேலைநிறுத்தத்தின் காரணமாக ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காப்பீடு திட்டம் உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும், ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 95 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை, கோவையில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



இந்த வேலைநிறுத்தம் காரணமாக விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளினர்கள், லாரி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடுவதை பொறுத்து, நாள் வருமானம் அடிப்படையில் தான் லாரி ஒட்டுநனர்களும், கிளினர்களும் தினசரி சம்பளம் வாங்கி வருகின்றனர். தற்போது, லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வருமானம் இல்லாமலும், வாழ வழியில்லாமலும் தவித்து வருகின்றனர்.

இது குறித்து லாரி ஒட்டுநனர் கே. ஜிகா கூறுகையில், "இது வாழ்வா..? சாவா..? என்கிற போராட்டம். லாரிகள் இயங்காததால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கும் வருமானத்திற்கு வழியில்லை. கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. இதேநிலை நீடித்தால் பட்டினி தான். குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற போகிறோம் எனத் தெரியவில்லை," என்றார்.

மற்றொரு ஒட்டுநனர் ரா. கார்த்தி கூறுகையில், "ஒரு தடவை கோவையில் இருந்து சென்னை சென்று வந்தால் 2 நாட்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும். ஆனால் மாதம் 10 நாட்களுக்கு மேலாக வேலை இருக்காது. தற்போது, பணம் இல்லாமல், என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்," என்கிறார் வேதனையுடன்.

ஊருக்கெல்லாம் காய்கறிகளை கொண்டு சேர்த்த லாரி ஒட்டுநனர்களால், தற்போது ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியவில்லை என லாரி ஒட்டுநனர்கள் தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்தினார்கள்.



இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு, செயலாளர் தனராஜ் நம்மிடம் கூறுகையில், "போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இன்னும் மத்திய, மாநில அரசுகள் அழைக்கவில்லை. போராட்டம் மேலும் தீவிரமடையவே வாய்ப்புள்ளது. லாரி ஒட்டுநனர், கிளினர்கள், பராமரிப்பாளர்கள் என அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது," என்றார்.

மத்திய, மாநில அரசுகள் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே லாரி ஒட்டுநனர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...