திருப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி கருப்பு கொடியேற்றி கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கருப்பு கொடியேற்றியும், கடைகளை அடைத்தும் இன்று போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கருப்பு கொடியேற்றியும், கடைகளை அடைத்தும் இன்று போராட்டம் நடத்தினர்.

15 வேலம்பாளையம் பகுதி அமர்ஜோதி கார்டனில் கடந்த வாரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியினர் கடைகளை அடைத்தும், கருப்பு கொடிகளை கட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை அடைத்துவிடுவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...