கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே, சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பரம்பிக்குளம் அணையும் நிரம்ப உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 116.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 1,121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிட உள்ளதால், கோட்டூர் ஆனைமலை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே, சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பரம்பிக்குளம் அணையும் நிரம்ப உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 116.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 1,121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிட உள்ளதால், கோட்டூர் ஆனைமலை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.