நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியாறு அணை இன்று இரவுக்குள் நிரம்பும் அபாயம்

கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே, சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பரம்பிக்குளம் அணையும் நிரம்ப உள்ளது. 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 116.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 1,121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிட உள்ளதால், கோட்டூர் ஆனைமலை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...