மேட்டுப்பாளையம்: எதிர்பார்ப்பையும் மீறி பெய்த பருவமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கியதால், பரிசலில் சென்று வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம்: எதிர்பார்ப்பையும் மீறி பெய்த பருவமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கியதால், பரிசலில் சென்று வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடரும் கனமழை மற்றும் பில்லூர் அணை நிரம்பியதால் அதன் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைக்காட்டில் இருந்து கீழ் நோக்கி கரைபுரண்டோடி வரும் பவானியாறு, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி வழியே பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இதனால், 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
நீர்வரத்து காரணமாக வெகுவேகமாக உயரும் நீர்மட்டத்தால் அணையின் பின்புறமுள்ள இதன் நீர்தேக்க பகுதியெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. இதனால், அணையின் நீர்தேக்கப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. பொதுப்பணித்துறையினர் அனுமதியோடு இப்பகுதியினை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராகியிருந்த 7,000 ஏக்கர் பரப்பளவு வாழைமரங்கள் அனைத்தும் நீருக்கடியில் சென்றுவிட்டன. எதிர்பார்ப்பையும் மீறி பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தினால், கடும் இழப்பை எதிர்கொள்ள இயலாமல் கலங்கி நிற்கின்றனர் இப்பகுதி வாழை விவசாயிகள்.

பல லட்சம் வாழைமரங்கள் அடியோடு நீரில் முழுவதுமாக மூழ்கி கண்களுக்கே தெரியாத நிலையில், சற்றே மேடான பகுதியில் சில ஆயிரம் வாழை மரங்களின் மேல்பகுதி மட்டும் நீருக்கு வெளியே தெரிகின்றன. இதில், காய்த்து நிற்கும் வாழைத்தார்களை வெட்டி எடுத்தாவது தங்களது இழப்பை ஓரளவேனும் சமாளிக்க இயலுமா என்ற முயற்சியில் தற்போது விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீரில் மூழ்கிக் கிடக்கும் வாழைத்தோட்டங்களுக்குள் பரிசல் மூலம் சென்று கிடைக்கும் வாழைத்தார்களை வெட்டும் ஆபத்தான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் இப்பகுதியில் வாழை விவசாயம் செய்துள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. இதன் காரணமாகவே, மூழ்கி கிடக்கும் வாழை மரங்களுக்கிடையே மிகுந்த சிரமத்தோடு பரிசலில் பயணிக்கும் பரிதாப நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில நூறு வாழைத்தார்களாவது இதன்மூலம் கிடைத்தால், இந்த விவசாயத்தை மேற்கொள்ளப் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தவாவது உதவுமே என இம்முயற்சியில் இறங்கியுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள். திடீர் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதித்துள்ள இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு உதவிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடரும் கனமழை மற்றும் பில்லூர் அணை நிரம்பியதால் அதன் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைக்காட்டில் இருந்து கீழ் நோக்கி கரைபுரண்டோடி வரும் பவானியாறு, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி வழியே பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இதனால், 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
நீர்வரத்து காரணமாக வெகுவேகமாக உயரும் நீர்மட்டத்தால் அணையின் பின்புறமுள்ள இதன் நீர்தேக்க பகுதியெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. இதனால், அணையின் நீர்தேக்கப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. பொதுப்பணித்துறையினர் அனுமதியோடு இப்பகுதியினை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராகியிருந்த 7,000 ஏக்கர் பரப்பளவு வாழைமரங்கள் அனைத்தும் நீருக்கடியில் சென்றுவிட்டன. எதிர்பார்ப்பையும் மீறி பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தினால், கடும் இழப்பை எதிர்கொள்ள இயலாமல் கலங்கி நிற்கின்றனர் இப்பகுதி வாழை விவசாயிகள்.

பல லட்சம் வாழைமரங்கள் அடியோடு நீரில் முழுவதுமாக மூழ்கி கண்களுக்கே தெரியாத நிலையில், சற்றே மேடான பகுதியில் சில ஆயிரம் வாழை மரங்களின் மேல்பகுதி மட்டும் நீருக்கு வெளியே தெரிகின்றன. இதில், காய்த்து நிற்கும் வாழைத்தார்களை வெட்டி எடுத்தாவது தங்களது இழப்பை ஓரளவேனும் சமாளிக்க இயலுமா என்ற முயற்சியில் தற்போது விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீரில் மூழ்கிக் கிடக்கும் வாழைத்தோட்டங்களுக்குள் பரிசல் மூலம் சென்று கிடைக்கும் வாழைத்தார்களை வெட்டும் ஆபத்தான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் இப்பகுதியில் வாழை விவசாயம் செய்துள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. இதன் காரணமாகவே, மூழ்கி கிடக்கும் வாழை மரங்களுக்கிடையே மிகுந்த சிரமத்தோடு பரிசலில் பயணிக்கும் பரிதாப நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில நூறு வாழைத்தார்களாவது இதன்மூலம் கிடைத்தால், இந்த விவசாயத்தை மேற்கொள்ளப் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தவாவது உதவுமே என இம்முயற்சியில் இறங்கியுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள். திடீர் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதித்துள்ள இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு உதவிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.