கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. சோலையாறு அணையில் 16 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 162.87 (160) அடியாக உள்ளது. விநாடிக்கு 3,683.71 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 3,581.71 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் : 70 (72அடி) அடியாக உள்ளது. தொடர் மழையினால் அணைக்கு 4,279 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,007 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, ஆழியாறு அணை, அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியில் 116.60 அடியளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 1,121 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 919 கனஅடியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணையான திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 50.98 (60அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 976 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 29 கனஅடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 87.34 (90 அடி) அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 1,625 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 1,284 கனஅடியாக உள்ளது.
சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 55.00 கனஅடி. தற்போது, 49.53 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 94.00 கனஅடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,696 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியாறு அணையில் தற்போது 115.50 அடி நீர் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக உள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு:
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. சோலையாறு அணையில் 16 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 162.87 (160) அடியாக உள்ளது. விநாடிக்கு 3,683.71 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 3,581.71 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் : 70 (72அடி) அடியாக உள்ளது. தொடர் மழையினால் அணைக்கு 4,279 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,007 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, ஆழியாறு அணை, அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியில் 116.60 அடியளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 1,121 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 919 கனஅடியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணையான திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 50.98 (60அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 976 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 29 கனஅடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 87.34 (90 அடி) அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 1,625 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 1,284 கனஅடியாக உள்ளது.
சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 55.00 கனஅடி. தற்போது, 49.53 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 94.00 கனஅடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,696 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியாறு அணையில் தற்போது 115.50 அடி நீர் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக உள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு:
- வால்பாறை - 12 மி.மீ.
- அப்பர் நீராறு - 19 மி.மீ.
- லோயர் நீராறு - 18 மி.மீ.
- காடம்பாறை - 3 மி.மீ.
- பொள்ளாச்சி - 16 மி.மீ.