கோவை மாநகராட்சியில் ரூ.6.27 கோடியில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

கோவை: கோவை நகராட்சியில் ரூ. 6.27 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜீ இணைந்து தொடங்கி வைத்தனர்.

கோவை: கோவை நகராட்சியில் ரூ. 6.27 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜீ இணைந்து தொடங்கி வைத்தனர். 



கோவை மாநகராட்சி, திறன்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வார்டு எண்.86, பள்ளி வீதி, பள்ளிவாசல் அருகில், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் பள்ளி வீதி, ஆசாத் நகர், எம்.சி.ஆர்.நகர், சேரன் நகர், அண்ணா காலனி ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 4.24 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். 



பின்னர், வார்டு எண்.57 இராஜலட்சுமி நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 48 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும், வார்டு எண். 66, உடையாம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலையரங்க கூடத்தையும் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர்ராஜீ ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 



மேலும், வார்டு எண்.66-ல் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களைத் திறந்து வைத்து, சிறப்புத் திட்டத்தின்படி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகங்களை அமைச்சர்கள் வழங்கினர். இதைத் தொடர்ந்து, சி.என்.எ.தேவர் லே-அவுட் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 15 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவையும், பி.ஆர் லே-அவுட் பகுதியில் ரூ. 35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்த வைத்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...