கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம் அணி) காவலர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் இளம்வீரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம் அணி) காவலர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் இளம்வீரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (25). கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை (4-ம் அணி)யில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல 10 மணி வரை அமர்நாத் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை வளாகத்தில் உள்ள காவல்துறையினர் வழக்கம் போல பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அமர்நாத் இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்ட சக போலீசார், குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் காவலரின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (25). கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை (4-ம் அணி)யில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல 10 மணி வரை அமர்நாத் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை வளாகத்தில் உள்ள காவல்துறையினர் வழக்கம் போல பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அமர்நாத் இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்ட சக போலீசார், குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் காவலரின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.