5 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பினால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து 12 மணி முதல் 40,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பை கருதி கூடுதலாக 10,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடி, அணையில் இருந்து இருந்து நீர்திறப்பு 30,000 கனஅடியாக தற்போது உள்ளது. மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையம் வழியாக உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக கிழக்கு - மேற்கு கால்வாயில் 200 கனஅடியும் என மொத்தம் 30,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அதிகளவு உபரிநீர் திறக்கப்படுவதால், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்பட 12 மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...