கோவை : லாரி உரிமையாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாமல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என கோவை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கோவை : லாரி உரிமையாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாமல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என கோவை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, விவசாயப் பொருட்களை விற்பனைக்கான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான விளை பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னையில் நேற்று இரவு முதலே விவசாயிகள் காய்கறிகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இந்த நிலையில், கோவையில் இன்று முதல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம், கோவையின் பொதுமேலாளர் கோவிந்தாஜ் நம்மிடம் கூறுகையில், "பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் இலவசமாகக் காய்கறிகளை மட்டும் அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லலாம். எக்ஸ்பிரஸ், சாதாரணப் பேருந்து, புறநகர் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளிலும் ஏற்றிச் செல்லலாம். காய்கறி மூட்டைகளை சீட்டின் மேல் ஏற்றக்கூடாது," என்றார்.
சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, விவசாயப் பொருட்களை விற்பனைக்கான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான விளை பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னையில் நேற்று இரவு முதலே விவசாயிகள் காய்கறிகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இந்த நிலையில், கோவையில் இன்று முதல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம், கோவையின் பொதுமேலாளர் கோவிந்தாஜ் நம்மிடம் கூறுகையில், "பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் இலவசமாகக் காய்கறிகளை மட்டும் அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லலாம். எக்ஸ்பிரஸ், சாதாரணப் பேருந்து, புறநகர் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளிலும் ஏற்றிச் செல்லலாம். காய்கறி மூட்டைகளை சீட்டின் மேல் ஏற்றக்கூடாது," என்றார்.