கேரளாவில் கோவையைச் சேர்ந்த லாரி கிளீனர் கல்லால் அடித்துக் கொலை : வேலைநிறுத்தத்தை மீறி காய்கறி ஏற்றிச் சென்றதால் வெறிச்செயல்

வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரியின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அதன் க்ளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.


வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரியின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அதன் க்ளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.



சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக விளைவித்த பொருட்களை பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 15,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு வேலைநிறுத்தத்தையும் மீறி, ஓட்டுநர் நூருல்லா லாரியில் காய்கறிகளை ஏற்றிச் சென்றார். லாரி கேரள மாநிலத்திற்குள் நுழைந்து கஞ்சிக்கோடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தையும் பொருட்படுத்தாமல் லாரியை இயக்கியதால், 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

இதில், லாரியின் க்ளீனர் பாட்ஷா பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் நூருல்லா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு சில கோரிக்கைகளுக்காக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டக் காரணத்தினால், கோவையைச் சேர்ந்த லாரியின் க்ளீனர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...