கஞ்சா குடிக்கும் இடமாக மாறிய ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானம்: கண்டுகொள்ளாத 'நம்பர் ஒன்' காவல் நிலையம்

கோவை: போதைப் பொருட்களை இளைஞர்கள் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் இடமாக ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானம் மாறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: போதைப் பொருட்களை இளைஞர்கள் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் இடமாக ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானம் மாறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம். சட்டம் & ஒழுங்கு, குற்றங்கள் குறைவு போன்ற காரணத்தால் மத்திய அரசு இந்த விருதினை சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு வழங்கியது.

விருதினால் புகழ் பெற்ற இந்த காவல் நிலையத்தின் அருகில் உள்ள மைதானத்தில் தொடர்ந்து, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரியல் மைதானம்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள பரியல் மைதானம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானம் அருகே பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, காது கேளாதோர் பள்ளி, தமிழ் இசைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.



பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்காக பரியல் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பரியல் மைதானத்தில் சில இளைஞர்கள் அண்மைக்காலமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இளைஞர்களும், கல்லூரி மாணவர்கள் சிலரும் ஒன்றிணைந்து கஞ்சா, போதை ஊசி, மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. தற்போது, பட்டப்பகலில், சில இளைஞர்கள் அந்த மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



துணிகரம்

பொதுமக்கள் அதிகமாக நடமாடும், கோவையின் மத்திய பகுதியில், இளைஞர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் வண்ணம் உள்ளது. மேலும், போதைப் பொருட்களை கைமாற்றிக் கொள்ளும் பிரதான இடமாகவும் இந்த பரியல் மைதானம் உள்ளது.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த அத்தனை சமூக விரோத செயல்களும் காவல் நிலையம் அருகிலேயே நடைபெறுகிறது. எனவே, மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் பயன்படுத்தும் பரியல் மைதானத்திற்குள் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாதவாறு போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...