திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அவினாசி சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கிருபாசங்கர் என்பவர் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
நிறுவனத்தின் வங்கி கணக்கு திருப்பூர் குமரன் சாலையிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியிலுள்ளது. சமீபத்தில் பழனிசாமி கையெழுத்து போட்ட காசோலை வங்கிக்குச் சென்றுள்ளது. கையெழுத்து வேறுபாடாக இருக்கவே வங்கியிலிருந்து பழனிசாமியை தொடர்பு கொண்ட போது, தான் எதுவும் காசோலை வழங்கவில்லை என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பனியன் நிறுவன கணக்கை தணிக்கை செய்ததில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 1.50 கோடி அளவில் மோசடி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தின் மேலாளர் கிருபாசங்கரிடம் விசாரித்த போது, கடந்த 4 ஆண்டுகளாக பழனிசாமியின் கையெழுத்திட்டு பணத்தை எடுத்து, தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வங்கி கணக்கில் அனுப்பி மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிசாமி புகார் அளித்ததின் பேரில் கிருபாசங்கர்(27), கிருஷ்ணராஜ்(52) ஆகிய இருவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்புண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அவினாசி சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கிருபாசங்கர் என்பவர் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
நிறுவனத்தின் வங்கி கணக்கு திருப்பூர் குமரன் சாலையிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியிலுள்ளது. சமீபத்தில் பழனிசாமி கையெழுத்து போட்ட காசோலை வங்கிக்குச் சென்றுள்ளது. கையெழுத்து வேறுபாடாக இருக்கவே வங்கியிலிருந்து பழனிசாமியை தொடர்பு கொண்ட போது, தான் எதுவும் காசோலை வழங்கவில்லை என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பனியன் நிறுவன கணக்கை தணிக்கை செய்ததில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 1.50 கோடி அளவில் மோசடி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தின் மேலாளர் கிருபாசங்கரிடம் விசாரித்த போது, கடந்த 4 ஆண்டுகளாக பழனிசாமியின் கையெழுத்திட்டு பணத்தை எடுத்து, தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வங்கி கணக்கில் அனுப்பி மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிசாமி புகார் அளித்ததின் பேரில் கிருபாசங்கர்(27), கிருஷ்ணராஜ்(52) ஆகிய இருவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்புண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.