குளங்களை பார்வையிட 'ஹாயாக' கோவையை வலம் வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

கோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக் கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், நிரம்பி வழியும் குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களான புட்டுவிக்கி போன்ற குளங்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.



குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது. இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல, அவரது பின்னால் அமர்ந்தபடி, பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். 

இது தொடர்பாக, அவரது பேஸ்புக் பக்கத்தில், கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வழியும் நிலையில், குளக்கரையின் உயரத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எங்க ஹெல்மெட்?

அமைச்சர் இப்படி பயணம் செய்ய, அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மீண்டுமொரு முறை நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த சூழலில், தமிழக அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்த விவகாரம் சர்ச்சையை உண்டாகியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...