கோவை: ஈச்சனாரி மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி மின்விளக்குகள் செயல்பாட்டை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.
கோவை: ஈச்சனாரி மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி மின்விளக்குகள் செயல்பாட்டை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 23-வது வார்டு வெங்கடாசலம் சாலையிலுள்ள பூங்காவினை 49.50 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100 ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின்விளக்குகளின் செயல்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 23-வது வார்டு வெங்கடாசலம் சாலையிலுள்ள பூங்காவினை 49.50 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100 ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின்விளக்குகளின் செயல்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.