கோவையில் கேரள போலீசாரை தாக்கி கைதியை கடத்திச் சென்ற கும்பலால்

கோவை: கேரள போலீசாரால் கைது செய்து அழைத்துவரப்பட்ட கைதியை கோவை அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே மர்ம கும்பல் போலீ்சாரை தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கேரள போலீசாரால் கைது செய்து அழைத்துவரப்பட்ட கைதியை கோவை அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே மர்ம கும்பல் போலீ்சாரை தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் மகாராஜன்(43). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

ஜேக்கப் கடன் வாங்கியிருந்த போது தன்னுடைய வோல்வா காரை மகாராஜனிடம் தந்துள்ளார். அதைத் தொடர்ந்து மகாராஜனிடம், வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்த பிறகும் மகாராஜன் காரை தராமல் ஏமாற்றிவந்துள்ளார்.

இதை தொடர்ந்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார், ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் அடங்கிய குழு நேற்று மாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மாலை 5 மணிக்கு கைது செய்து கேரளாவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், போலீசார் வந்த கார் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் அருகே வந்த போது, இரவு 11 மணிக்கு அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் கேரள போலீசாரை தாக்கிவிட்டு அந்த காரிலிருந்த மகாராஜனை மீட்டுச் சென்றனர்.



இந்தநிலையில், கடத்தல் சம்பவம் தொடர்பாக பாலக்காடு காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



போலீசாரை தாக்கி கைதியை கடத்தி சென்ற சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்? யார் கடத்தி சென்றுள்ளனர்? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறையினரைத் தாக்கி கைதியை கடத்திச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...