கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் இன்று நடைபெற்றுது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், முன்னாள் கிரிகெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.

10, 5, 3 மற்றும் 1 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெற்றது. காவலர் பயிற்சி மைதானத்தில் இருந்து தொடங்கப்படும் இப்போட்டி, பாலசுந்தரம் சாலை வழியாக, அவினாசி சாலையை கடந்து, பந்தய சாலையை சுற்றி, நேரு ஸ்டேடியம் வழியாக மீண்டு மைதானத்தை வந்தடைகின்றனர்.
ஆண், பெண் என இரு பாலருக்குமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வீதம் மொத்தம் 24 பேருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், 1098 என்ற சைல்டு லைன் எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.