சேலம்: நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில், தற்போது 117 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில், தற்போது 117 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.
இதன் காரணமாக, தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. 16 கண் பாலம் பகுதி முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூரில் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக திகழும் மேட்டூர் அணை 1,700 மீட்டர் நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.
இதன் காரணமாக, தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. 16 கண் பாலம் பகுதி முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூரில் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக திகழும் மேட்டூர் அணை 1,700 மீட்டர் நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.