சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியின், கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி, மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளில் இன்று காலை 7:47 மணி அளவில் சில விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு சேலம் அம்மாப்பேட்டையில் தொடங்கி பென்னாகரம் வரை உள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேட்டூர் அணையில் தற்போது 116.98 அடிக்கு மேல் நீர் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் நில அதிர்வை கணக்கீடு செய்யும் சிஸ்மோமீட்டர் பழுதடைந்து விட்டதால் நில அதிர்வு அளவு இன்னும் கணக்கிடும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
எனினும் சிறிது நேரத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நில அதிர்வு பதிவாகியிருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.