ஸ்மார்ட் சிட்டி திட்டம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு

கோவை: கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.



மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பந்தய சாலை பகுதியில் திறந்தவெளி திரையரங்கம், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகள் விளையாட்டு திடல்கள், கழிவறைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும்.



தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் வழக்கமான ஒன்று. இதனால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமான நிலையை எடுத்தது. ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி உரிமையை அ.தி.மு.க., மீட்டுள்ளது. மக்களவையில் எம்.பி.,க்கள் இல்லாத தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து பேசுவதற்கான அவசியம் புரியவில்லை.

மத்திய அரசுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க., தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர் நலன்களுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது?" எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...