கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி (18) உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் 304-ல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஆறுமுகம் வைத்திருந்த போலிச்சான்றிதழ் தொடர்பாகவும், அவருடைய பின்னணி குறித்து அறிய ஆலாந்துறை போலீசார் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள், போலியாக தயாரித்த சீல்டுகள் இரண்டு கணினி மற்றும் பிரிண்டர்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகானந்த் (49) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் அச்சடித்துக் கொடுத்ததும், கடந்த 5 ஆண்டுகளாக போலி சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி (18) உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் 304-ல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஆறுமுகம் வைத்திருந்த போலிச்சான்றிதழ் தொடர்பாகவும், அவருடைய பின்னணி குறித்து அறிய ஆலாந்துறை போலீசார் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள், போலியாக தயாரித்த சீல்டுகள் இரண்டு கணினி மற்றும் பிரிண்டர்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகானந்த் (49) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் அச்சடித்துக் கொடுத்ததும், கடந்த 5 ஆண்டுகளாக போலி சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.