கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்த வருகின்றனவா..? என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை புறநகர் பகுதியான சூலூர் பகுதியில் இன்று 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், ஆசாபுரி என்ற கடையில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள பான்மசாலா குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, நாகம்மாள் ஏஜென்சியில் இருந்து 47 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்த வருகின்றனவா..? என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை புறநகர் பகுதியான சூலூர் பகுதியில் இன்று 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், ஆசாபுரி என்ற கடையில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள பான்மசாலா குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, நாகம்மாள் ஏஜென்சியில் இருந்து 47 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.