கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விடக் கூடுதலாக பெய்தது. இதன் காரணமாக, கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பின. மேலும், மாவட்டத்தின் பல்வேறு அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. தற்போது, இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கோவை, நீலகிரி இரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
