வழக்கம் போல தாமதமாக வந்த அமைச்சர் : முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காத சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி

கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.



கோவை குருடம்பாளையம் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் மத்திய பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக காலை 11 மணிக்கே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். 



வழக்கமாகக் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி சி.ஆர்.பி.எப்.நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில், அமைச்சரின் வருகை தாமதமானதால் நிகழ்ச்சியைத் துவக்க தாமதம் ஏற்பட்டது. இதோ வந்துவிடுவார்..! இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கும் என பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டாலும் அமைச்சர் வந்த பாடில்லை.

தூங்கி வழிந்த வீரர்கள் : 



ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்துப் பார்த்த சி.ஆர்.பி.எப்.,வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டையும் மீறி தூங்கி வழிய ஆரம்பித்தனர். சரியான நேரத்தில் உணவு அருந்திப் பழகிய வீரர்கள் பசியோடு அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஒரு வழியாக இரண்டே கால் மணியளிவில் அமைச்சர் அங்கு வந்து சேர்ந்தார். 



இதனையடுத்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டால், அங்கு சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்து தத்துரூபமாக செயல் விளக்கம் செய்து காட்டினர். பின்னர், அங்கு உள்ள செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பார்வையிட்டார். கடைசியாக ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கலைந்து சென்றனர்.


Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...