தொழிலதிபர்களை தாக்கி ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: தேடப்பட்டு வந்த குற்றவாளி கோவையில் கைது

திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஆண்டு 6 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல் ஆசைதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஆண்டு 6 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல் ஆசைதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்த ஏ.வி. குமார், நிக்சன், சிவராமன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தேங்காய் பருப்பு வாங்குவதற்காக காங்கேயம் நால்ரோடு பகுதிக்குச் சென்றனர். அங்கு காருடன் அவர்களை கடத்திச் சென்ற கும்பல், மூவரையும் ஈரோடு, குமாரபாளையம் பகுதிகளில் வைத்து பலமாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது சொகுசு காரையும், ரொக்கம் ரூ. 6 லட்சத்தையும் 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.

பின்னர், ஏமாற்றப்பட்டவர்களில் நிக்சன் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (42), ரகுநாதசாமி (37), பாலமுருகன் (31), குகன் (42), ஈரோடு வரதராஜன் (45), காங்கேயம் சேர்ந்த வக்கீல் ஆசைதம்பி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே 5 கொலை வழக்குகள், பல கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள வக்கீல் ஆசைதம்பியை காங்கேயம் ஆய்வாளர் எஸ். முருகேசன் தலைமையிலான போலீசார் கோவையில் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை காங்கேயம் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி .சுப்பிரமணியம், வக்கீல் ஆசைதம்பியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வக்கீல் ஆசைதம்பி மீது நீலகிரி போலீசார் குண்டாஸ் ஏற்கனவே பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...