லட்சக்கணக்கான புத்தகங்களுடன் கொடிசியா அரங்கில் தொடங்கியது 'கோயமுத்தூர் புத்தக கண்காட்சி'

கோவை: கொடிசியா அரங்கில் கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவை: கொடிசியா அரங்கில் கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவை கொடிசியா அரங்கில் நான்காவது கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வருகின்ற 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 175 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ள நிலையில், 275 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு தலைப்புகளில் நாவல்கள், கவிதைகள், இலக்கியங்கள், கதைகள், அரசியல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட லடச்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதய சந்திரன் தொடங்கி வைத்தார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த புத்தக கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. குழந்தைகள் மூலம் பெற்றோர்களும் இந்த கண்காட்சிக்கு வருவார்கள் என நம்புகிறோம்.

புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவது மூலம் அடுத்த தலைமுறைக்கான முதிர்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும். மேற்கு மண்டல மக்கள் இந்த புத்தக கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்றார்.



புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், "எழுத்தாளர்களின் புதிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், வாசகர்களை சந்திக்கவும் புத்தகக் கண்காட்சிகள் உதவுகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய கடமை உள்ளது. புத்தக வாசிப்பு என்பது ஆளுமையை மாற்றக்கூடியது. ஆகவே அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." என்றார்.

புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களுக்கு ஏற்ப பத்து சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சலுகை அடிப்படையில் தள்ளுபடி தரப்படுகிறது. பாடங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களை ஒருசேர வாங்கவும்,குறைந்த விலையில் வாங்கவும் புத்தக கண்காட்சி உதவிக்கரமாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதாகவும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும். அறிவை விரிவு செய்யும் வகையில் அறிவியல் கதைகள், படங்களுடன் கூடிய சமூக நெறி கதைகள், காமிக்ஸ்,உள்ளிட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகுமென எதிர்பார்ப்பதாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாக குழந்தைகளிடம் பாடப்புத்தகங்களை தவிர்த்த பற்ற புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் விரும்பிப் படிக்கும் ஏராளமான புத்தகங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் புத்தக.கண்காட்சிக்கு வருகை தந்ததாகவும். ஒன்றரை கோடிக்கு வணிகம் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு ஒரு லட்சம் பேர் வரை வருகை தருவார்கள் எனவும் இரண்டரை கோடி வரை வணிகம் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகப் புத்தக கண்காட்சியின் தலைவர் சவுந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...