கனமழை காரணமாக துண்டிக்கப்பட்ட சாலை: கோவையில் தத்தளிக்கிறது ஒரு கிராமம்

கோவை: இருட்டுப்பள்ளத்தை அடுத்து அமைந்துள்ளது முட்டத்து வயல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.


கோவை: இருட்டுப்பள்ளத்தை அடுத்து அமைந்துள்ளது முட்டத்து வயல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் உள்ளன. இங்கிருந்து இருட்டுப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு விரைவாகச் செல்ல ஒரு மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையை விட்டால் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றியே மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும்.



அந்த மண் சாலை, உக்குளம் குளக்கரை அருகே அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் உக்குளம் குளமானது நிரம்பி வழியத்தொடங்கியது. இதனால், தற்போது குளத்தில் இருந்து நீர் வெளியேறி வருகிறது.

சாலை இல்லை

அவ்வாறு வெளியேறும் நீர், அந்த மண் சாலையினை முழுவதுமாக விழுங்கிக்கொண்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அக்கிராம மக்கள், கடந்த ஆறு நாட்களாக இந்த நிலை நீடிப்பதாகவும், சேறும் சகதியுமான அந்த சாலைக்குள் நடக்கவே முடியாது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.



வெளி கிராமத்தில் இருந்து பால் கறக்க வரும் ஆட்கள் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியாத காரணத்தால், கறவை மாடுகளை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று சாலையில் நிறுத்தி பால்கறக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கூறுகையில், "இந்த பருவமழை தொடங்கியது முதலே எங்களுக்கு பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது. இந்த கிராமத்திற்கு தார் சாலை வசதி செய்து தரக்கோரிய எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. சேறும் சகதியுமான சாலைகளால் நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். தற்போது அந்த மண் சாலையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.



இளைஞர்கள் இதனை எளிதில் கடந்து சல்ல முடியும். ஆனால், பள்ளி குழந்தைகளும், முதியவர்களும் இந்த சாலையை கடந்து வெளியே செல்வது முடியாத காரியம்." என்றார்.

மழை குறைந்துள்ள இந்த நேரத்தில் முட்டத்து வயல் கிராமத்தில் சாலை அமைத்து அந்த கிராமம் தனித் தீவாக மாறிவிடாமல் தடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்பது அந்த கிராம மக்களின் கேள்வியாக ஒலிக்கிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...