திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் சமையலராக இருந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தலைமை ஆசிரியர், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரியும், தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் படி ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் தீண்டாமை ஒளிப்புக்கான கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரைவை ஆகிய கட்சியினரும் கலந்து கொண்டனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்களைத் தரக்குறைவாக நடத்த கூடியதை கண்டித்து வரும் 24-ம் தேதி அணைத்து கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.