மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் : சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வட்டம், கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது வட்டப்பாறை கிராமம். கட்டாஞ்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த கல் குவாரிகளால் ஆங்காங்கே பயன்பாட்டில் இல்லாத கல் குழிகள் காணப்படுகின்றன.

வெடி வைத்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இந்த ஆழமான கல் குழிகள் தற்போது குப்பைகள் கொட்டும் குப்பைக்குழிகளாக மாற்றப்பட்டு விட்டன. கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பை கழிவுகளும் தற்போது வட்டப்பாறை கிராமத்தில் உள்ள கல் குழியில் கொட்டப்பட்டு வருகின்றன.

சாலையோரத்தில் உள்ள இக்கல் குழிக்குள் பேரூராட்சி நிர்வாகமே தினசரி லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டி வருவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர் வட்டப்பாறை கிராம மக்கள். 



பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் இப்பகுதியைச் சுற்றி இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் இரவு நேரங்களில் இங்கேயே கொட்டப்பட்டு வருவதாகக் கூறும் மக்கள், இதனால் கடும் துர்நாற்றத்துடன் கொசுக்கள் அதிகரித்து விட்டதாகவும், வீடுகளுக்குள் ஈக்கள் படையெடுத்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இக்கிராமத்தில், நிலப்பகுதில் இருந்து இருநூறு அடிக்கும் அதிகமான ஆழ கல் குழிக்குள் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து விவசாயமே செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை, என புகார் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரிய இக்கல் குழிக்கு அருகிலேயே மழைநீர் சேமிப்பு குட்டை உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் பவானியாற்றை சென்றடையும் நீர் வழிப்பாதையாகவும் இருக்கின்றது. 

இப்படி பல்வேறு வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்கும் இப்பிரச்சினை குறித்து கூடலூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “வட்டப்பாறை கிராம மக்களிடமிருந்து இது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், விரைவில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்." என தெரிவித்தனர். 



சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் விவசாயத்தை பாழ்படுத்தும் வகையில் கல் குவாரி குழிக்குள் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஆபத்தான வகையில் எவ்வித தடுப்புக்களுமின்றி காணப்படும் பயன்படுத்தப்படாத கல் குழிகள் மூடப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...