திருப்பூர்: தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பூரில் பெண் ஒருவரை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருப்பூர்: தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பூரில் பெண் ஒருவரை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் தலித் என்பதால், பள்ளியில் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஒரு சாதி பிரிவினர் நேற்று முன்தினம் பள்ளியில் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தான் இதே பள்ளியில் தான் பணியாற்றுவேன் என்று பாப்பாள் கூறினார்.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் எனபவர் தேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அணுகினார். அதன் பேரில் அந்த ஆணையம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அவர்கள் மூவரையும் வரும் 30-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைமையகத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவர் முருகன் முன் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் அவினாசி டி.எஸ்.பி., பரமசாமியும் ஆஜராகிறார்.
இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்புச் சட்டம் 2015-ன் படி, புகார்தாரர் மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும், சம்மன் கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது வரை, கவுண்டன் இனத்தைச் சேர்ந்த 87 பேரை கைது செய்துள்ளனர். இதில் 9 பேர் மீது பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்புச் சட்டம் 2015-ன் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.