கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், கோவை லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் இயங்குகின்றன. இவை அனைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்ததில் பங்கேற்றுள்ளன.
அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், மருத்து, தண்ணீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.கலியபெருமாள் கூறுகையில், "காந்தியின் வழியான அகிம்சை வழியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்படும்" என்றார்.
