இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற கொள்ளையன் காவல் துறையிடம் ஒப்படைப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்ற கொள்ளையனை மருத்துவமனையின் தனியார் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்ற கொள்ளையனை மருத்துவமனையின் தனியார் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல இங்குள்ள நோயாளிகளை பார்ப்பதற்காகவும் நலம் விசாரிப்பதற்காகவும் உறவினர்களும் நண்பர்களும் வருவதும் போவதுமாகவும் வழக்கம். இதில் இங்கு இருசக்கர வாகனத்தில் நோயாளிகளை சந்திக்க வரும் நோயாளிகளின் உறவினர்கள் வாகனத்தை நிறுத்த மொத்தம் ஐந்து இரு சக்கர வாகன பேருந்து நிறுத்தங்கள் உள்ளது.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் மொத்தம் 78 தனியார் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசு மருத்துமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதில் இரண்டு போலிசார்கள் உள்ளனர். 



இந்நிலையில், இன்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருச்சியைச் சேர்ந்த குழந்தை சாமியின் மகன் ராஜன்(53)என்பவர் திருட முயற்சித்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் காவலர்கள் திருடனை கையும் களவுமாக பிடித்தனர். 



பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்றவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...