கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 29.5 முதல் 30 டிகிரி செல்சியசாயாகவும் இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாசாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் 20 கீ.லோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம் இந்த வாரம் சற்று குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 14முதல் 16 கிலோ மீட்டர் வரை வீசும்.
எனவே, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான தட்ட வெப்ப நிலை நிலவுவதால் பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது." என்றார்.
ஆகவே, கோவை வாசிகளே பெய்யவிருக்கும் மழையில் 'அடடா., மழை டா; அட மழை டா..!' என்று பாடி கொண்டாட காத்திருங்கள்...
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 29.5 முதல் 30 டிகிரி செல்சியசாயாகவும் இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாசாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் 20 கீ.லோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம் இந்த வாரம் சற்று குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 14முதல் 16 கிலோ மீட்டர் வரை வீசும்.
எனவே, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான தட்ட வெப்ப நிலை நிலவுவதால் பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது." என்றார்.
ஆகவே, கோவை வாசிகளே பெய்யவிருக்கும் மழையில் 'அடடா., மழை டா; அட மழை டா..!' என்று பாடி கொண்டாட காத்திருங்கள்...