'அடடா., மழை டா; அட மழை டா..!' - கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை

கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 29.5 முதல் 30 டிகிரி செல்சியசாயாகவும் இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாசாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கடந்த வாரம் 20 கீ.லோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம் இந்த வாரம் சற்று குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 14முதல் 16 கிலோ மீட்டர் வரை வீசும்.

எனவே, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான தட்ட வெப்ப நிலை நிலவுவதால் பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது." என்றார்.

ஆகவே, கோவை வாசிகளே பெய்யவிருக்கும் மழையில் 'அடடா., மழை டா; அட மழை டா..!' என்று பாடி கொண்டாட காத்திருங்கள்...

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...