கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டை ஈஸ்வரன் வீதியைச் சேர்ந்தவர் சதாம் உசேனின் மகன் ரபிக் (27). இவர் டவுன்ஹால் சுற்றுவட்டாரங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு ரத்த அணுக்கள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல் சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், ரபீக்கிற்கு இரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்டை ஈஸ்வரன் வீதியைச் சேர்ந்தவர் சதாம் உசேனின் மகன் ரபிக் (27). இவர் டவுன்ஹால் சுற்றுவட்டாரங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு ரத்த அணுக்கள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல் சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், ரபீக்கிற்கு இரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.