தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை ஈஸ்வரன் வீதியைச் சேர்ந்தவர் சதாம் உசேனின் மகன் ரபிக் (27). இவர் டவுன்ஹால் சுற்றுவட்டாரங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு ரத்த அணுக்கள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல் சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், ரபீக்கிற்கு இரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...