தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் திருப்பூரில் பறிமுதல்

திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துணை சட்ட விதிகளின் கீழ் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகைக் கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். 



அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிகள் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும், அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதேபோல், மற்றொரு கடையிலும் 1/2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...