கோவை: என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை: என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இளைஞர்கள் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த அமைப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவர்கள் சரவணம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும், பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவர்கள் சேவையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல்துறை (தலைமையிடம்) துணை ஆணையர் தர்மராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கல்வியில் சமுதாய பாடங்கள் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களிடம் சமுதாய சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் அர்த்தமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் அது அர்த்தமான வாழ்க்கையாக இருக்காது. மாணவர்கள் சமுதாய சிந்தனையோடு பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்." என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர்.தவமணி பழனிசாமி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ்.நமசிவாயம் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இளைஞர்கள் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த அமைப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவர்கள் சரவணம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும், பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவர்கள் சேவையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல்துறை (தலைமையிடம்) துணை ஆணையர் தர்மராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கல்வியில் சமுதாய பாடங்கள் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களிடம் சமுதாய சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் அர்த்தமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் அது அர்த்தமான வாழ்க்கையாக இருக்காது. மாணவர்கள் சமுதாய சிந்தனையோடு பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்." என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர்.தவமணி பழனிசாமி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ்.நமசிவாயம் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
