வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்கள் கொட்டி தீர்த்த மழை மறுபடியும் பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்கள் கொட்டி தீர்த்த மழை மறுபடியும் பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
வால்பாறை-பொள்ளாச்சி செல்லும் 36-வது கொண்டை ஊசி வளைவு அருகில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், அவ்வழியாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து சீர் செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் சென்றன.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வால்பாறை அருகே உள்ள கூலங்கள் ஆறு, சோலையாறு, பிர்லா பால்ஸ், நடுமலை, வாழைத்தோட்டம் போன்ற ஆறுகளில் சுற்றலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெல்லப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றோரங்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.