வால்பாறை, திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம்

வால்பாறை: வால்பாறை மற்றும் திருப்பூர் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.



வால்பாறை: வால்பாறை மற்றும் திருப்பூர் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 83 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 156 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 4,354.04 கனஅடியாகும். அருவியில் இருந்து சுரங்கம் வழியாக 3,129.92 கனஅடியும், ஷட்டர் வழியாக 1,184.97 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

நீரார் அணையில் மழையின் அளவு 105 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 1,265.03 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,360.35 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 95 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 164.42 (160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,643.20 கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 6,310.99 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பைபாஸ் வழியாக 2,043.52 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, ஷட்டர் திறக்கப்பட்டு பரம்பிகுளம் அணைக்கு 2,419.21 கன அடி நீரும், 603.47 கன அடி சோலையார் பவர்ஹவுஸ் 2 வழியாக மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது.



பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம்: 164.42 (160அடி) அடியாக உள்ளது. தொடர் மழையினால் அணைக்கு 10,584. 38 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 755 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, ஆழியார் அணை, அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியில் 103.50 அடியளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 3,990 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 34 கனஅடியாக உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணையான திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 37.18 (60அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 1,101 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 28 கனஅடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 86.19 (90 அடி) அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 6,146 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 2,952 கனஅடியாக உள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...