நீலகிரியில் தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். இந்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்படுவதுடன், மரங்களும் சாய்ந்து விழுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உதகையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:– உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள புயல் நிவாரண மையங்களை மின் இணைப்புடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள், மருத்துவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பெற வேண்டும்.

நெடுஞ்சாலை, நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாட்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரம் அறுக்கும் மின்வாள் உள்ளிட்ட உபகரணங்கள் செயல்படுகிறதா என்பதை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளுக்கு உள்வட்ட வாரியாக ஏற்கனவே 13 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது தமிழ்நாடு அரசு சுற்றறிக்கையின் படி, ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 5 முதல் 7 வரையிலான அபாயகரமான பகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 22 குழுக்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 35 குழுக்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து விதமான பேரிடர்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு குழுவில் 7 பேர் இருப்பார்கள். அருகில் உள்ள போலீஸ் நிலையங்களின் தொலைப்பேசி எண்கள் சம்பந்தப்பட்ட குழு அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...