கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அங்கு செல்லும் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சாலை துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கோவை குற்றாலம் கடந்த 9-ம் தேதி முதல் மூடப்பட்டது. பதினோரு நாட்களுக்குப் பிறகு நேற்று குற்றாலம் திறக்கப்பட்டது.
மழை காரணமாக வெள்ளம் ஓயாத போதிலும், குற்றாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க செல்லும் பொது மக்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே போல், கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கின் போது குற்றாலம் திறக்கப்பட்டதால் அங்கு குளிக்க சென்ற 27 வயது பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். எனவே, நீர்வரத்து குறையும் வரையில் குற்றாலத்தை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.