பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பஞ்சாலை சங்கங்கள் வலியுறுத்தல்

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி கூறியதாவது :- கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது. வியட்னாமில் இருந்து சீனாவில் இறக்குமதியாகும் பருத்தி நூலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம். 

வியட்னாமில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி வரிகள் இல்லை என்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இருந்தபோதும், இந்திய பருத்தி நூலின் தரம் காரணமாகத் தொடர்ந்து ஏற்றுமதி இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் புதிய ஸ்பிண்டில்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்பிண்டில்கள் மாற்றப்பட்டு வருவதால், இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்த போதும், நூல் உற்பத்தி அதிகரிக்கவில்லை. 

பஞ்சாலைகள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு இதுவரை ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. எனவே, இலாபம் குறைவதை கருத்தில் கொண்டு, இவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட பஞ்சை கண்டறிய அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க எடுக்க வேண்டும். இது தொடர்பாக பஞ்சாலை சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...