கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர்.

அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர்.

அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.