மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.