திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சார் ஆட்சியரால் வழங்கப்பட்ட பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் குமரன் சிலை முன் , தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போலீசாரின் தடையை மீறி நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சார் ஆட்சியருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சார் ஆட்சியரால் வழங்கப்பட்ட பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் குமரன் சிலை முன் , தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போலீசாரின் தடையை மீறி நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சார் ஆட்சியருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.