சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் போது, விளைநிலங்கள் அழிக்கப்படும் என்றும் வனப்பகுதி பாதிக்கப்படும் என்றும் கூறி சேலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஆச்சாங்கோட்டப்பட்டி பகுதியில் நில அளவைக்கு வந்த வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் சமூக ஆர்வலரான வளர்மதியும் இருந்தார். தொடர்ந்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.
முன்னதாக, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.