கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற தன்னார்வலர்களை சிறுதுளி அமைப்பு வரவேற்றுள்ளது.
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற தன்னார்வலர்களை சிறுதுளி அமைப்பு வரவேற்றுள்ளது.
கோவையை மையமாக கொண்டு செயல்படும் சிறுதுளி அமைப்பு சமீபத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டு சாலையோரம் வீசப்பட்டிருந்த சுமார் 5,000 பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றியது.

இந்த சூழலில், இரண்டாம் கட்ட தூய்மைப் பணிக்காக தன்னார்வலர்களை வரவேற்றுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் சிறுதுளி அமைப்பை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி எண் : 98946 31551 / 91422-2318222 / 333.