கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில், எல்லையோர பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பெண் மாவோயிஸ்ட் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆனைகட்டி வழியாக கோவைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் நக்சல் தடுப்பு படையினர் இன்று மாலை திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனைகட்டி வழியாக கோவைக்குள் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவுவதை தடுக்க இந்த திடீர் சோதனையானது நடத்தப்படுவதாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர்.

இந்த திடீர், சோதனையால் தமிழக - கேரள எல்லையோரங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில், எல்லையோர பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பெண் மாவோயிஸ்ட் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆனைகட்டி வழியாக கோவைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் நக்சல் தடுப்பு படையினர் இன்று மாலை திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனைகட்டி வழியாக கோவைக்குள் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவுவதை தடுக்க இந்த திடீர் சோதனையானது நடத்தப்படுவதாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர்.

இந்த திடீர், சோதனையால் தமிழக - கேரள எல்லையோரங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.