உதகையில் பிரபல ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ. 48,000 அபராதம் விதிப்பு

நீலகிரி: உதகையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான அடையார் ஆனந்த பவனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: உதகையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான அடையார் ஆனந்த பவனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற இன்னசென்ட் திவ்யா, சில நாட்களிலேயே 19-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி, பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை அங்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் தடையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கமர்சியல் சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் உதகை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிண்ணங்கள், மேசை விரிப்புகள் மற்றும் டம்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 24 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, ஒரு கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரூ. 2,000 வீதம் ரூ. 48,000 அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும், இந்தக் கட்டிடத்தில் 40 மேசைகள் இருக்கும் அளவுக்கே அனுமதி வாங்கியுள்ள நிலையில், 100 மேசைகளுக்கு மேல் பயன்படுத்துவதைக் கண்ட நகராட்சி ஆணையர் ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...