கோவையில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.



உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை கண்டறிய கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவுண்டம்பாளையம், சங்கனூர் சாலை, ஆவாரம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள் மற்றும் பழச்சாறு கடைகளில் இன்று சோதனை நடைபெற்றது.



உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் உரிமம், பாக்கெட் உணவு வகைகளின் காலாவதி தேதி, தின்பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், டீ தூளின் தரம், உணவு பாதுகாக்கப்படும் முறை, குளிர்பானங்களின் காலாவதி தேதி ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர்.



சங்கனூர் சாலை அருகே அமைந்துள்ள டீ கடையில், சுத்தமில்லாத தண்ணீர் பயன்படுத்துவது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு, கடை உரிமையாளிரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் கிருபாகரன் பேசுகையில், "நகரில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்தும் பேக்கரிகளில் எந்த சுகாதார விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. தொடர்ந்து இது போன்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்." என்றார்.

சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இதுபோன்று தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கலப்பட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...