உதகை பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.



நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியும், போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 9 பேருக்கு ரூ. 40 லட்சம் காப்பீடு மூலம் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.






பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முதலமைச்சர் நிவாரண நிதி மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம் சார்பில் காப்பீடு மூலம் உடனே காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முறை முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி தவிர, போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சமும் என ரூ. 40 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தரமில்லாத பேருந்துகள் இல்லை. போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கு ரூ. 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார். இதைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உதகை பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Video: Syed Abbas

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...